×

கோவை- 2 வயது மூத்தவர் என காதலுக்கு எதிர்ப்பு – இளம்பெண் தற்கொலை

கோவை கோவையில் தன்னை விட 2 குறைந்த இளைஞரை காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் தேனூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் நந்தினி(22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் கோவையைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியது.. இந்த நிலையில் நந்தினிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில்
 

கோவை

கோவையில் தன்னை விட 2 குறைந்த இளைஞரை காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் தேனூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் நந்தினி(22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் கோவையைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு,


பின்னர் அது காதலாக மாறியது.. இந்த நிலையில் நந்தினிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் அவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் இளைஞரின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், மகனை விட 2 வயது மூத்தவர் என்பதால் நந்தியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து, நந்தினியின்

பெற்றோரை சந்தித்து தங்கள் மகனுடன் பழகுவதை நிறுத்திகொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால், நந்தினியின் பெற்றோரும் இளைஞருடன் பேசுவதை நிறுத்திகொள்ள அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த நந்தினி தனது விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.