திருமாவளவனுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் புகார்
கோவை இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் பெண்கள் அமைப்பினர் புகார் அளித்தனர். இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பெரியார் டிவி என்னும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளதாகவும், இது சமூக பதற்றத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமாவளவன் மற்றும் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் நடவடிக்கை
Oct 24, 2020, 14:51 IST
கோவை
இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் பெண்கள் அமைப்பினர் புகார் அளித்தனர். இந்து அன்னையர் முன்னணி அமைப்பின்
சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பெரியார் டிவி என்னும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளதாகவும், இது சமூக பதற்றத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தை
தூண்டும் வகையிலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமாவளவன் மற்றும் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.