×

கோவை- ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு

கோவை கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் நேற்று குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய அமுதா, தனது உறவினர்களான செல்வராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வீட்டின் வழித்தடத்தை ஆக்கரமித்து வீடு கட்டுவதாகவும், இதனால் தன் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும், பூர்வீக சொத்தான அந்த இடத்தை பிரித்து எழுதி தர வேண்டும் எனவும், கட்டுமான பணிகளை
 

கோவை

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் நேற்று குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து பேசிய அமுதா, தனது உறவினர்களான செல்வராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வீட்டின் வழித்தடத்தை ஆக்கரமித்து வீடு கட்டுவதாகவும், இதனால் தன் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பூர்வீக சொத்தான அந்த இடத்தை பிரித்து எழுதி தர வேண்டும் எனவும், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தனர்.