×

மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மாரடைப்பால் மரணம்

கோவை கோவை அருகே மகள் உயிரிழந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில், தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது வீட்டில் பூச்சிமருந்து அடித்த நிலையில், குடும்பத்துடன் தூங்கியதாக கூறப்படுகிறது. மருந்தின் நெடி பரவியதில் சண்முகம் மற்றும் அவரது மகள் அனுராதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சுவாச பிரச்சினை காரணமாக அனுராதா மருத்துவமனை செல்லும் வழியிலேயே
 

கோவை

கோவை அருகே மகள் உயிரிழந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில், தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது வீட்டில் பூச்சிமருந்து அடித்த நிலையில், குடும்பத்துடன் தூங்கியதாக கூறப்படுகிறது.

மருந்தின் நெடி பரவியதில் சண்முகம் மற்றும் அவரது மகள் அனுராதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சுவாச பிரச்சினை காரணமாக அனுராதா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சண்முகத்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,

மகள் உயிரிழந்த தகவலை கேட்ட, அவரது தாய் பிரேமகுமாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.