×

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகைகள் கொள்ளை!

கோவை கோவை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகேயுள்ள ராமர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று மாலை செட்டிப்பாளையம் திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து உள்ளே
 

கோவை

கோவை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகேயுள்ள ராமர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று மாலை செட்டிப்பாளையம் திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 18 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் செட்டிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவினை சேகரித்தனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.