×

மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்கள் ! போலீஸ் விசாரணை

சென்னை மதுரவாயலில், வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இரண்டு பெண்கள் தீ வைத்து எரித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், மெட்ரோ நகர் பகுதியில் வசிப்பவர் அழகர்சாமி. அப்பகுதியில் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் வேலை செய்து வரும் 2 பேர் உணவு சாப்பிடுவதற்காக நேற்று முந்தினம் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில், அவர்கள் அலுவலக வராண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்
 

சென்னை மதுரவாயலில், வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இரண்டு பெண்கள் தீ வைத்து எரித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், மெட்ரோ நகர் பகுதியில் வசிப்பவர் அழகர்சாமி. அப்பகுதியில் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் வேலை செய்து வரும் 2 பேர் உணவு சாப்பிடுவதற்காக நேற்று முந்தினம் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில், அவர்கள் அலுவலக வராண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதாக அக்கம்,பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஊழியர்கள் வந்து பார்த்த போது சங்கர் என்பவரின் மோட்டார்சைக்கிள் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சதாம் உசேன் வாகனம் லேசான சேதம் ஏற்பட்டது.

தீயை அவர்களே அணைத்த நிலையில், இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பெண்கள் முகத்தை மூடியபடி வந்து, அங்கு நிறுத்தி இருந்த வாகனத்தை தீவைத்து கொளுத்தி விட்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து தீ வைத்து கொளுத்திய பெண்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.