×

நிவர் புயல் எதிரொலி – செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் அதிகரிப்பு

சென்னை நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று அலைகள் அதிகரித்து காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து, கடந்த வாரம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து ஒருவார காலமாக மழை பெய்யாததால் ஏரிக்கு நீர்வரத்து நின்றுபோனது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார
 

சென்னை

நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று அலைகள் அதிகரித்து காணப்பட்டது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து, கடந்த வாரம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து ஒருவார காலமாக மழை பெய்யாததால் ஏரிக்கு நீர்வரத்து நின்றுபோனது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால், ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

தற்போது ஏரியில் அதிகளவு நீர் உள்ள நிலையில், நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், எப்போதும் அமைதியாக காணப்படும் செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் அதிகரித்து காணப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.