×

கணவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மூதாட்டி பலி

சென்னை திருமுல்லைவாயல் அருகே கணவர் உயிரிழந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில், 70 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல், புதிய அண்ணா நகர், நேரு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (85). இவரது மனைவி ராஜம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலை அம்பத்தூர் ஏரியில் மீன் பிடித்தும், ராஜம்மாள் அப்பகுதியில்
 

சென்னை

திருமுல்லைவாயல் அருகே கணவர் உயிரிழந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில், 70 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல், புதிய அண்ணா நகர், நேரு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (85). இவரது மனைவி ராஜம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலை அம்பத்தூர் ஏரியில் மீன் பிடித்தும், ராஜம்மாள் அப்பகுதியில் வீட்டுவேலை செய்தும், தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் , கடந்த சில நாட்களாக தம்பதியினர் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழுமலை நேற்று பகல் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜம்மாளின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவரது மகன் பாலன், இந்த செய்தியை பொறுமையாக இரவு 10.30 மணிக்கு கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த படுக்கையில் இருந்த ராஜம்மாள் லேசாக கண்ணீர் வடித்தபடியே உயிரிழந்தார். கணவன் – மனைவி இருவரும் ஒரே நாளில் வைகுண்ட ஏகாதசி அன்று உயிரிழந்த சம்பவம் அறிந்து உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி சென்றனர்.