×

சுடு தண்ணீர் வைத்தபோது மின்சாரம் தாக்கியதில், தம்பதி உயிரிழப்பு

சென்னை சென்னையில் வாட்டர் ஹீட்டரில் சுடு தண்ணீர் வைத்தபோது மின்சாரம் தாக்கியதில், கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர் சென்னை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் விஜயகுமார்(38) – சசிகலா (28) தம்பதியர். விஜயகுமார் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இந்த நிலையில், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இனறு அதிகாலை வாட்டர் ஹீட்டர் மூலம் சசிகலா சுடு தண்ணீர் வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக
 

சென்னை

சென்னையில் வாட்டர் ஹீட்டரில் சுடு தண்ணீர் வைத்தபோது மின்சாரம் தாக்கியதில், கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர் சென்னை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் விஜயகுமார்(38) – சசிகலா (28) தம்பதியர். விஜயகுமார் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்.

இந்த நிலையில், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இனறு அதிகாலை வாட்டர் ஹீட்டர் மூலம் சசிகலா சுடு தண்ணீர் வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வாட்டர் ஹீட்டரில் கோளாறு ஏற்பட்டு, சசிகலாவின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவரது வலது கை கருகிதை கண்ட விஜயகுமார், அவரை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் வீட்டின கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.