×

கிரிக்கெட் விளையாட்டில் மோதல்- இளைஞரை தாக்கிய, போலீஸ் அதிகாரி மகன் உள்பட 6 பேர் கைது

சென்னை ஆவடி அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் தலைமை காவலரின் மகனை தாக்கிய புகாரில், முன்னாள் உதவி ஆணையரின் மகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை, திரு.வி.க தெருவை சேர்ந்தவர் உளவுத்துறை தலைமை காவலர் ரமேஷ். இவரது மகன் மனோஜ்ராஜ் (20). இவர், தனியார் கல்லூரியில் பி.ஏ, 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2ஆம் தேதி அன்று மனோஜ் ராஜ், தனது நண்பர்களுடன் திருமலைவாசன் நகரில் உள்ள
 

சென்னை

ஆவடி அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் தலைமை காவலரின் மகனை தாக்கிய புகாரில், முன்னாள் உதவி ஆணையரின் மகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை, திரு.வி.க தெருவை சேர்ந்தவர் உளவுத்துறை தலைமை காவலர் ரமேஷ். இவரது மகன் மனோஜ்ராஜ் (20). இவர், தனியார் கல்லூரியில் பி.ஏ, 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2ஆம் தேதி அன்று மனோஜ் ராஜ், தனது நண்பர்களுடன் திருமலைவாசன் நகரில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது, அவருக்கும் பாரதி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் மோகன் என்பவரது மகனும், சக நண்பருமான செரி (22) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செரியும், அவரது நண்பர்களும் சேர்ந்து மனோஜ் ராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த மனோஜ்ராஜை உறவினர்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து மனோஜ்ராஜ் மற்றும் செரி ஆகிய இருவரும் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்ராஜை தாக்கியதாக செரி(22), ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த அசாருதீன் (20), சாம்ராஜ் (21), விஷால் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல், செரியை தாக்கியதாக ஆவடி பூம்பொழில் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(28) மற்றும் திருமுல்லைவாயலை சேர்ந்த சுரேஷ் (21) ஆகியேரை கைதுசெய்தனர். இதனை அடுத்து அவர்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.