×

சென்னையில் ரூ.28 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது!

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி ஆசனவாயில் மறைத்து கடத்திவந்த 28 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விமானத்தில் வநத பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை
 

சென்னை

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி ஆசனவாயில் மறைத்து கடத்திவந்த 28 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விமானத்தில் வநத பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.

அதில், அவர் தஙகத்தை பசை வடிவில் மாற்றி, அதனை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரிடம் 3 உருளைகளில் இருந்து 621 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 28 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதுதொடர்பாக தங்கம் கடத்திவந்த பயணியை கைதுசெய்து சுங்க அதிகாரிகள், அவரிடம் யாருக்காக தங்கத்தை கடத்திவந்தார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.