×

சென்னையில் ரூ.13 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி கைது!

சென்னை துபாயில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மாத்திரைகளாக மாற்றி விழுங்கி கடத்தி வந்த நபரை, சுங்கத்துறையினர் கைதுசெய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரியாஸ் (39) என்பவரது உடமைகளில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள்
 

சென்னை

துபாயில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மாத்திரைகளாக மாற்றி விழுங்கி கடத்தி வந்த நபரை, சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரியாஸ் (39) என்பவரது உடமைகளில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை கடத்திவந்தது தெரியவந்தது.இதனை அடுத்து, ரியாசை தனியே அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.

இதில் அவர் தங்கத்தை மாத்திரைகளாக மாற்றி விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதித்து, அவரது வயிற்றில் இருந்து 34 தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனர். இதன் மொத்த மதிப்பு 13 லட்சம் ஆகும்.

இதனை அடுத்து, அவரிடம் இருந்த மொத்தமாக 19 லட்சத்து, 85 ஆயிரம் லட்சம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முகமது ரியாசை சுங்கத்துறையினர் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.