×

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- ஆர்.டி.ஓ விசாரணை

சென்னை சென்னை பூந்தமல்லியில் திருமணமாகி மூன்றே ஆண்டுகள் ஆன நிலையில், இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்(29). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு சியாமினி(27) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே, பார்த்திபன் – சியாமினி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
 

சென்னை

சென்னை பூந்தமல்லியில் திருமணமாகி மூன்றே ஆண்டுகள் ஆன நிலையில், இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்(29). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு சியாமினி(27) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே, பார்த்திபன் – சியாமினி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தி அடைந்த சியாமினி, அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பார்த்திபன், கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது சியாமினி தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் சியாமினி உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.