×

காதலன் இறந்த சோகத்தில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

சென்னை ஆவடி அருகே காதலன் உயிரிழந்த வேதனையில், ஆந்தராவை சேர்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சுஜாதா (21). சுஜாதா அவரது உறவினரை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இளைஞர் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வந்த சுஜாதாவை, அவரது பெற்றோர் சென்னை ஆவடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு அழைத்துச் வந்தனர். இந்த நிலையில்,
 

சென்னை

ஆவடி அருகே காதலன் உயிரிழந்த வேதனையில், ஆந்தராவை சேர்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சுஜாதா (21). சுஜாதா அவரது உறவினரை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இளைஞர் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த வந்த சுஜாதாவை, அவரது பெற்றோர் சென்னை ஆவடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு அழைத்துச் வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த போது, தனியாக இருந்த சுஜாதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிகொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இரவு வீட்டிற்கு திரும்பிய முருகன், மகள் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் முத்தாப்புதுப்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.