×

பூந்தமல்லி கிளைச் சிறையில் இங்கிலாந்து நாட்டவர் உயிரிழப்பு- கொரோனா பீதியில் கைதிகள்…

பூந்தமல்லி பூந்தமல்லி கிளைச்சிறையில் இங்கிலாந்தை சேர்ந்த கைதி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டேவிட் ஆண்டனி(68). இவர் தர்மபுரி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது உறுதியானது. இதனால் டேவிட் ஆண்டனி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைதுசெய்து, கடந்த 5ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள
 

பூந்தமல்லி

பூந்தமல்லி கிளைச்சிறையில் இங்கிலாந்தை சேர்ந்த கைதி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டேவிட் ஆண்டனி(68). இவர் தர்மபுரி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது உறுதியானது.

இதனால் டேவிட் ஆண்டனி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைதுசெய்து, கடந்த 5ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அடைத்தனர். சிறையில் விசாரணை கைதியாக இருந்த வந்த அவர், இன்று காலை திடீரென மயங்கி விழுந்தார். சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி காவல் நிலைய போலீசார், டேவிட் ஆண்டனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ள நிலையில், அந்த நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்தால் கைதிகள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. சிறையில் அடைக்கும் முன்பாக நடத்திய பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் கைதிகளின் பாதுகாப்பு கருதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.