×

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 59 மில்லியன் கனஅடி உயர்வு

சென்னை வடகிழக்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 59 மில்லியன் கனஅடி உயர்ந்துள்ளது. சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, கிருஷ்ணா நதியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
 

சென்னை

வடகிழக்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 59 மில்லியன் கனஅடி உயர்ந்துள்ளது. சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, கிருஷ்ணா

நதியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 760 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 59 மில்லியன் கனஅடி உயர்ந்தது.

இதனையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 18.47 அடியாகவும், நீரின் கொள்ளவு மொத்த 2 ஆயிரத்து 241 மில்லியன் கனஅடியாகவும் அதிகரித்தது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 760 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், சென்னை குடிநீருக்காக 66 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவும், 24 அடி உயரமும் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, மழைக் காலங்களின்போது 21 அடியை எட்டியவுடன் பாதுகாப்பு கருதி 5 மற்றும் 19 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்துவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.