×

கருவுற்ற பூனைக்கு சீமந்தம் நடத்திய குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ

. சென்னை நெற்குன்றத்தில் வீட்டில் வளர்த்து வரும் கருவுற்ற பூனைக்கு, அதன் உரிமையாளர் சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சென்னை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வளர்த்து வரும் பூனை ஒன்று கருவுற்று இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ஜோதிகுமார் குடும்பத்தினர், கருவுற்ற பெண்களுக்கு செய்வது போன்று, தங்களது பூனைக்கு
 

.

சென்னை

நெற்குன்றத்தில் வீட்டில் வளர்த்து வரும் கருவுற்ற பூனைக்கு, அதன் உரிமையாளர் சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சென்னை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வளர்த்து வரும் பூனை ஒன்று கருவுற்று இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ஜோதிகுமார் குடும்பத்தினர், கருவுற்ற பெண்களுக்கு செய்வது போன்று, தங்களது பூனைக்கு சீமந்தம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, பூனைக்கு அலங்காரம் செய்து, சீர் வரிசை தட்டுகள் மற்றும் 7 விதமான உணவுகள் சமைத்து விழா நடத்தினர். மேலும், பூனைக்கு பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து, பூனையை சேரில் அமரவைத்து, அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வளையல்களை அணிவித்து சீமந்தம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஜோதிகுமாரின் உறவினர்களும் கலந்துகொண்டு, பூனைக்கு உணவுகளை வழங்கி கொண்டாடினர். செல்லப்பிராணிக்கு வளைகாப்பு நடத்திய இந்த வீடியோவை குடும்பத்தினர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.