×

சென்னை- பூந்தமல்லியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை சென்னை பூந்தமல்லி பகுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி நம்பி நகர் முதல் தெருவை சேர்ந்த ராஜி என்பவரது மகள் ஜீவிதா(18). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டின் அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று
 

சென்னை

சென்னை பூந்தமல்லி பகுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி நம்பி நகர் முதல் தெருவை சேர்ந்த ராஜி என்பவரது மகள் ஜீவிதா(18). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டின் அறைக்குள் சென்றவர் நீண்ட

நேரமாகியும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஜீவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த

பூந்தமல்லி போலீசார், ஜீவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.