×

பைக்கில் இருந்து தவறி விழுந்த தம்பி- அண்ணன் கண் எதிரேலேயே பலி!

சென்னை சென்னை குன்றத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சகோதரர்கள் சென்ற நிலையில், தவறி விழுந்த தம்பி அண்ணன் கண் எதிரேலேயே தம்பி பலியானார். குன்றத்தூர், புது வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிபாஸ் . 15 வயதாகும் இவர், அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது தம்பி அனஷ் காஜா, கோவூரில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.சகோதரர்கள் இரண்டு பேரும் அவர்களது நண்பர் முஷாரப்(15), என்பவருடன் சேர்ந்து ஒரே
 

சென்னை

சென்னை குன்றத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சகோதரர்கள் சென்ற நிலையில், தவறி விழுந்த தம்பி அண்ணன் கண் எதிரேலேயே தம்பி பலியானார். குன்றத்தூர், புது வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிபாஸ் . 15 வயதாகும் இவர், அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது தம்பி அனஷ் காஜா, கோவூரில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.சகோதரர்கள் இரண்டு பேரும் அவர்களது நண்பர் முஷாரப்(15), என்பவருடன் சேர்ந்து ஒரே பைக்கில் கோவூர் நோக்கி சென்றுள்ளனர். கோவூர் மின்வாரிய அலுவலகம் அருகே, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி, வாகனத்தில் இருந்து மூன்று பேரும் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி அனஷ் காஜா உடலின் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார், அனஷ் காஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். அண்ணன் கண் எதிரே தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.