×

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை... திருக்கோவிலூரில் சோகம்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான். இவரது மகள் அப்சா(26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவர் வீட்டினர் வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்சா, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும், தனது வாழ்க்கையை நினைத்து அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்திடைந்த அப்சா, நேற்று வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அப்சா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அப்சாவின் தாய் தவுலத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் அப்சா தற்கொலை செய்துகொண்டதால் இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ விசாரித்து வருகிறார்.