×

கவுந்தப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை - போலீசார் விசாரணை!

 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்த ராசு(41). இவர் சலங்கபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பவளக்கொடி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கோவிந்தராசுவின் நெருங்கிய நண்பரான ரவிகுமார் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, ரவிகுமார் தன்னை அழைப்பதாக கோவிந்தராசு குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை அவர் பெ.மேட்டுப்பாளையம் வெங்கமேடு பகுதியில் உள்ள தோட்டத்தில் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், கோவிந்தராசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் கவுந்தப்பாடி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.