×

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி மரணம்!

 

மதுரை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்து(78). கூலி தொழிலாளி. இவர் சிறுமிக்கு பாலியல்  தொல்லை அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கில் கைதாகிய நிலையில், மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் முத்துவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முத்துவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய சிறை நிர்வாகம் சார்பில், மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.