×

ஓமலூர் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 

ஓமலூர் அருகே அரசுப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது 17 வயது மகள் கவுசிகா. இவர் பண்ணப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கவுசிகா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கவுசிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிபட்டி போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.