×

திண்டுக்கல் அருகே பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 

திண்டுக்கல் அருகே 12ஆம் வகுப்பு மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தோமைராஜ். சரக்குவேன் ஓட்டுநர். இவரது மகன் ராகுல் லண்ட்(17). இவர் அகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில், ராகுல் லண்ட் தனது பற்களை சீரமைப்பதற்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதற்காக பற்களில் கிளிப் மாட்டியிருந்த நிலையில், அவருக்கு பல் வலி ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால், நேற்று பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு ராகுல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராகுல் லண்ட் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவ்ம குறித்து, புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.