×

கோவை அருகே போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்த நபர் கைது... ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை ஸ்டாம்புகள் பறிமுதல்!

 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சட்ட விரோதமாக போதை ஸ்டாம்புகளை விற்பனை செய்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்எஸ்டி எனப்படும் போதை ஸ்டாம்ப்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர்.

அப்போது, காரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 302 போதை ஸ்டாம்புகள் மற்றும் 1.5 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.  இது தொடர்பாக காரில் போதை ஸ்டாம்புகளை கடத்திச்சென்ற சிவராமன் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருண் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.