×

மின்னல் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் இருவர் பலி... திருச்சி அருகே சோகம்!

 

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை அருகே மின்னல் தாக்கி மின்வாரி ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள வலசிராமணி பகுதியில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் மின்பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பணி முடிந்து நேற்றிரவு ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் தாத்தையங்கார் பேட்டைக்கு  திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், மழையில் நினைந்தபடி ஊழியர்கள் வாகனத்தில் சென்றுள்ளனர். வலசிராமணியில் இருந்து சிறிது தொலைவு சென்றபோது சேலம் ஆத்துரை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் பழனிவேல், விஜி ஆகியோர் மீது திடீரென மின்னல் தாக்கியது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் தாத்தையங்கார் பேட்டை போலீசார், உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.