×

அரியலூரில் நவ.25-இல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

 

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (25.11.2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.