×

பல்லடம் நகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி!

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் மொத்தமுள்ள 18 இடங்களில் 14 இடங்களில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி தன்வசமாக்கியது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து, பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, மொத்தமுள்ள 18 இடங்களில் , திமுக 12 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுக தலா 1 இடங்களில் வெற்றி பெற்றன. இதன் மூலம் திமுக கூட்டணி மொத்தமுள்ள 18 இடங்களில், 14 இடங்களில் வெற்றிபெற்று பல்லடம் நகராட்சியை கைப்பற்றி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பாஜக 2 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வென்றுள்ளனர்.

சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். அதிமுக பலம் வாய்ந்த மேற்கு மண்டலத்தில் திமுக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது, அந்த கட்சியினர் இடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.