×

தென்காசி அருகே கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை!

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் செல்லதுரை(28). இவர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர், கல்லூரியில் உடன் பணிபுரிந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சமீப நாட்களாக அந்த பெண் செல்லதுரை உடன் பழகுவதை கைவிட்டு உள்ளார். இதனால் மனமுடைந்த செல்லத்துரை, கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

மேலும், அவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது செல்லதுரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.