×

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

 

கள்ளக்குறிச்சி அருகே அலங்கார மின்விளக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்ம குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி. தொழிலாளி. இவரது 7 வயது மகன் தர்ஷன். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், சம்பவத்தன்று சஞ்சீவ்காந்தி வீட்டின் அருகே திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அங்கு அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டு இருந்தது. அதன் அருகே சிறுவன் தர்ஷன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக தர்ஷன் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள் சிறுவன் தர்ஷன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.