×

பாலக்கோட்டில் அரசுப்பேருந்து மோதியதில் மூதாட்டி பலி!

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசுப்பேருந்து சக்கரம் ஏறியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து உள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் மனைவி சின்ன பாப்பா (72). இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக இன்று காலை பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது ஓசூரிலிருந்து தர்மபுரி நோக்கி வந்த அரசு மப்சுல் பேருந்து பாலக்கோடு பேருந்து நிலைபத்திற்குள் நுழைந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி சின்ன பாப்பாவின் மீது மோதியது.

இதில் நிலை குலைந்து கீழே விழுந்த மூதாட்டியின் தலை மீது பேருந்தின் முன்புற சக்கரம் ஏறியது. இதில் சின்னப்பாப்பா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பாலக்கோடு போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் வெங்கடாஜலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.