×

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை... சிவகாசி அருகே சோகம்!

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூச்சக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள் வாசுகி(21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும், இவர் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த வாசுகியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவரை கண்டித்து அந்த இளைஞருடன் பழகுவதை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனால் வாசுகி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.