×

கோவையில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் பெண் பலி!

 

கோவையில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணை ஸ்டவை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பற்றியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளி. இவரது மனைவி வனஜா(46). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பத்தன்று சங்கர் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், வனஜா சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த ஸ்டவ் அடுப்பில் டீசல் ஊற்றி பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் வனஜா அலறி துடிக்கவே வேலை முடிந்து வந்த சங்கர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதில் வனஜா பலத்த தீக்காயம் அடைந்தார். தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வனஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போத்தனுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.