×

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகன விபத்தில் கட்டிட தொழிலாளி பலி!

 

திண்டுக்கல் அருகே சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் குமார். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுந்தரதேவி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.  இந்த நிலையில், சம்பவத்தன்று பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். சத்திரப்பட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர உள்ள மின் கம்பத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.