×

திருப்பூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பெண் பலி!

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் 2  கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கோகிலாம்பாள்(41).  இவர்கள்  திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். தொடர்ந்து, இன்று அதிகாலை இருவரும் காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். வெள்ளக்கோவில் கடைவீதி பகுதியில் சென்றபோது சக்திவேல் கார் மீது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.  

இதில் பலத்த காயமடைந்த கோகிலாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சக்திவேல் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த வெள்ளக்கோவில் போலீசார், சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, போலீசார் லோகாம்பாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.