×

“குழந்தைங்க பாக்குறாங்க என்னை விடுங்க..” -கதறிய மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதிய பாருங்க.

ஒரு கணவன் குடும்ப தகராறில் குழந்தைகளின் முன்பே அவரின் மனைவியை கொலை செய்ததால் போலீசார் அவரை தேடி வருகின்றனர் . அவுரங்காபாத்தின் புறநகரில் உள்ள பிசாதேவி சாலை பகுதியில் கவிதா சித்தேஷ் திரிவேதி என்ற பெண் சித்தேஷ் என்ற கணவனோடு வசித்து வந்தார் .இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .அவர்களுக்கு தலா மூன்று வயது மற்றும் ஆறு வயது ஆகிறது .இந்நிலையில் அந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது .இதனால் சித்தேஷ் அவரின் மனைவி கவிதாவை
 


ஒரு கணவன் குடும்ப தகராறில் குழந்தைகளின் முன்பே அவரின் மனைவியை கொலை செய்ததால் போலீசார் அவரை தேடி வருகின்றனர் .

அவுரங்காபாத்தின் புறநகரில் உள்ள பிசாதேவி சாலை பகுதியில் கவிதா சித்தேஷ் திரிவேதி என்ற பெண் சித்தேஷ் என்ற கணவனோடு வசித்து வந்தார் .இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .அவர்களுக்கு தலா மூன்று வயது மற்றும் ஆறு வயது ஆகிறது .
இந்நிலையில் அந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது .இதனால் சித்தேஷ் அவரின் மனைவி கவிதாவை அடிக்கடி அடிப்பதும் உதைப்பதுமாக இருந்துள்ளார் .இந்த குடும்ப சண்டை குழந்தைகள் முன்னிலையே தினமும் அரங்கேறியுள்ளது .கடந்த வாரம் புதன்கிழமையன்று வழக்கம் போல் இந்த தம்பதிகளுக்குள் சண்டை வந்துள்ளது .அப்போது சித்தேஷ் அவரின் மனைவி கவிதாவை தங்களின் குழந்தைகளின் முன்பே தடியால் தாக்கி, முகத்தையும் தலையையும் கல்லால் அடித்து நொறுக்கி கொலை செய்துள்ளார் .அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பின்னர் இந்த கொலை பற்றி அவரின் குழந்தைகள் அருகில் உள்ள வீட்டிற்கு தெரியப்படுத்தினர் .
பின்னர் அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலிஸுக்கு தகவல் கூறினார்கள் .போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .பின்னர்
இறந்த பெண்ணின் தந்தை ஜெகதீஷ் அவஸ்தி, சித்தேஷ் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிந்து சித்தேஷை தேடி வருகின்றனர் .பின்னர் குழந்தைகளை அவர்களின் தாய்வழி தாத்தாவிடம் ஒப்படைத்தனர்.