×

“கணவருக்கு கசாயத்தில் தூக்கமாத்திரை” : சொந்த வீட்டில் 100 சவரன் நகைகளை ஆட்டையை போட்ட மனைவி!

இதனால் கடுப்பான அவரது மனைவி ஜான்சிராணி தனது உள்ள நகைகளை திருடி பணத்தேவையை பூர்த்தி செய்ய நினைத்துள்ளார். தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் சவேரியார் பிச்சை. இவரது மனைவி ஜான்சி ராணி. வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த வின்சென்ட் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் கஞ்சத்தனமாக இருந்துள்ளார். இதனால் கடுப்பான அவரது மனைவி ஜான்சிராணி தனது உள்ள நகைகளை திருடி பணத்தேவையை பூர்த்தி செய்ய நினைத்துள்ளார். இந்நிலையில் கொரோனா
 

இதனால் கடுப்பான அவரது மனைவி ஜான்சிராணி தனது  உள்ள நகைகளை திருடி பணத்தேவையை பூர்த்தி செய்ய நினைத்துள்ளார். 

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் சவேரியார் பிச்சை. இவரது மனைவி ஜான்சி ராணி. வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த வின்சென்ட் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் கஞ்சத்தனமாக இருந்துள்ளார். இதனால் கடுப்பான அவரது மனைவி ஜான்சிராணி தனது  உள்ள நகைகளை திருடி பணத்தேவையை பூர்த்தி செய்ய நினைத்துள்ளார். 

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி தூக்க மாத்திரை கலந்த கசாயத்தை கணவர் வின்சென்ட்டுக்கு ஜான்சிராணி கொடுக்க ஒருக்கட்டத்தில் வின்சென்ட் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் உள்ள 100 சவரன் நகைகளை திருடிய ஜான்சிராணி அதை வீட்டின் அருகிலேயே புதைத்து வைத்துள்ளார்.  இதை தொடர்ந்து மறுநாள் நகைகளை காணவில்லை என நாடகமாடிய அவர் கணவரை நம்பவைத்துள்ளார். இதனால் வின்சென்ட்  தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் இதுகுறித்து  புகார் அளித்துள்ளார்.

 அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில் போலீசாருக்கு ஜான்சி ராணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் தான்தான் நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் ஜான்சி ராணியை கைது செய்து கொரோனா அச்சுறுத்தலால் ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.