×

‘எனக்கு ஆயுசு கெட்டியாகனும்’.. 16 வயது மகளைத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

இவரது மகள் தனக்கு தன் தந்தையால் ஆபத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அவசர எண்ணுக்குப் புகார் கொடுத்துள்ளார். சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் அடிக்கடி ஆன்மிகம் என்ற பேரில் கொல்லிமலைக்குச் சென்று வந்து தான் சித்தர் என்று அவரே சொல்லிக் கொள்வாராம். இவரது மகள் தனக்கு தன் தந்தையால் ஆபத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஆவடி அனைத்து
 

இவரது மகள் தனக்கு தன் தந்தையால் ஆபத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அவசர எண்ணுக்குப் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் அடிக்கடி ஆன்மிகம் என்ற பேரில் கொல்லிமலைக்குச் சென்று வந்து தான் சித்தர் என்று அவரே சொல்லிக் கொள்வாராம். இவரது மகள் தனக்கு தன் தந்தையால் ஆபத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அவசர எண்ணுக்குப் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை செய்ய ஆவடி போலீசார் உடனே அந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, தன்னை தன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்வதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் சிறுமியின் தந்தை எங்கே என்று விசாரித்துள்ளனர். அப்போது, அவர் கொல்லிமலைக்குச் சென்றிருந்ததால் உடனே இங்கு வரவழைக்க எண்ணிய போலீசார், மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது தாயின் மூலமாக அவருக்குச் சொல்லச் சொல்லி உள்ளனர்.

அதன் பின்னர் உடனே வீட்டுக்கு வந்த அருளை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அருள் 10 வருடமாகக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததும், குடும்பத்தை அவரது மனைவி தான் பார்த்துக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தன்னை சித்தர் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி கொல்லிமலைக்கு சென்று வருவதும், தனக்கு ஆயுள் கெட்டியாக வேண்டும் என்பதற்காக தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.