×

‘ஆத்திரத்தில் அடித்த போது அவர் இறந்து விட்டார்.. அதனால் தான்…’ : மனைவியின் பகீர் வாக்குமூலம்!

திருமணம் ஆனதிலிருந்தே இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்குமாம். சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வ.உ.சி. நகரில் வசித்து வரும் தம்பதி தணிகைவேல்- ரேகா . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணம் ஆனதிலிருந்தே இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்குமாம். ஏனெனில், தணிகைவேல் மது அருந்திவிட்டு வந்து குழந்தைகளையும் ரேகாவையும் அடிப்பாராம். இதனால் ரேகா, தணிகைவேல் மீது கடும் கோபத்திலிருந்துள்ளார். நேற்று முன்தினமும் அதே போல இரண்டு நாட்களுக்கு
 

திருமணம் ஆனதிலிருந்தே இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்குமாம்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வ.உ.சி. நகரில் வசித்து வரும் தம்பதி தணிகைவேல்- ரேகா . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணம் ஆனதிலிருந்தே இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்குமாம். ஏனெனில்,  தணிகைவேல் மது அருந்திவிட்டு வந்து குழந்தைகளையும் ரேகாவையும் அடிப்பாராம். இதனால் ரேகா, தணிகைவேல் மீது கடும் கோபத்திலிருந்துள்ளார். நேற்று முன்தினமும் அதே போல இரண்டு நாட்களுக்கு முன்னரும் மனையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் தணிகைவேல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துவிட்டார் என்று ரேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர்  தணிகைவேலின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையில்,  தணிகைவேல் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ரேகாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ரேகா,  தணிகைவேல் குடித்து விட்டு வந்து குழந்தைகளை அடித்ததாகவும் அந்த ஆத்திரத்தில் தான் அடிக்கும் போது அவர் இறந்து விட்டதால் தூக்கு மாட்டி விட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.