×

வேறு பெண்ணுடன் உறவு: கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி; அதிர்ச்சி தரும் சம்பவம்!

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவியே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்: வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவியே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் – பூங்கொடி தம்பதி. பூங்கொடி கல்யாண சுந்தரத்தின் இரண்டாவது மனைவி ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவி இருவரும் ஒன்றாக விசைத்தறி வேலை செய்து வந்துள்ளனர்.
 

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த  கணவரை  மனைவியே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நாமக்கல்: வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த  கணவரை  மனைவியே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் – பூங்கொடி தம்பதி. பூங்கொடி கல்யாண சுந்தரத்தின் இரண்டாவது மனைவி ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவி இருவரும் ஒன்றாக விசைத்தறி வேலை செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கல்யாணசுந்தரம் உடன் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த மனைவி பூங்கொடி கல்யாணசுந்தரத்திடம் கேட்டுள்ளார். அதற்கு கணவரோ மழுப்பலாகவே பதிலளிக்க அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.  

இதை தொடர்ந்து சம்பவத்தன்றும் கள்ளக்காதல் தொடர்பாகக் கணவன் மனைவி சண்டை போட்டுள்ளனர். அப்போது இனிமேல் நீ என்னுடன் வேளைக்கு வரவேண்டாம் என்று கல்யாண சுந்தரம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி, அதிகாலையில் கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். மேலும் குடும்ப பிரச்சனையால் கணவரே கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார்.

இருப்பினும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கணவனை கொலை செய்ததைப் பூங்கொடி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை  போலீசார் கைது செய்தனர்.