×

`வெளியே சென்ற மாணவி; எரிந்த நிலையில் கிடந்தார் !’- பட்டப்பகலில் திருச்சியில் நடந்த பயங்கரம்

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியின் இரண்டாவது மகள் கங்காதேவி. 9 ஆம் வகுப்பு படித்து வந்த கங்காதேவி, இயற்கை உபாதை கழிக்க நேற்று மதிகம் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாக
 

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியின் இரண்டாவது மகள் கங்காதேவி. 9 ஆம் வகுப்பு படித்து வந்த கங்காதேவி, இயற்கை உபாதை கழிக்க நேற்று மதிகம் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாக கங்காதேவி வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உறவினர்களிடம் மகளை குறித்து விசாரித்துள்ளனர். அவர்களும் எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், பல இடங்களில் மகளை தேடியுள்ளனர். இந்த நிலையில், ஊருக்கு வெளியே கங்காதேவி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அலறியடித்துக் கொண்டு சென்ற பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகிலா தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவியை எரித்துக்கொலை செய்தார்களா அல்லது தந்தையுடன் ஏற்பட்ட தொழில் போட்டிக் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்று காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினரிடம் பேசியபோது, “சிறுமியின் உடல் கருகிக் கிடந்ததைப் பார்த்தால் நேற்று மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குக்குள் தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். உடல் கிடந்த இடத்தில் எரித்தற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. வேறு எங்கோ எரித்துவிட்டு இங்குக்கொண்டு போட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். அதே நேரத்தில் இந்த கொலையை திசை திருப்புவதற்காகப் உடல் அருகில் மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். முகம் மற்றும் நெஞ்சு பகுதிகள் சரியாக எரியவில்லை. இடுப்புக்குக் கீழ் பகுதிகள் மட்டும் முற்றிலும் கருகிய நிலையில் இருக்கிறது. தடயங்களை அழிப்பதற்காக எரித்தார்களா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது. சிறுமியின் தந்தை ஹார்வேர்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இதில் நான்கு பேர் பார்ட்னராக செயல்பட்டு வருகின்றனர். இதில் முன்விரோதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கோணத்திலும் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இது குறித்து முழுமையாகத் தெரியவரும்” என்றனர்.

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் திருச்சியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.