×

`வெளிநாட்டில் கணவர்; மருமகளை அடித்துக்கொன்ற மாமியார், மாமனார்!’- வரதட்சணை கொடுமையால் நடந்த பயங்கரம்

வெளிநாட்டில் கணவர் இருக்கும் நிலையில், இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார் சித்ரவதை செய்ததோடு, அவரை அடித்துக் கொன்ற சம்பவம் மேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிக்குமாருக்கும் து.அம்பலகாரன்பட்டியை சேர்ந்த சுந்தரேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பின்னர் பழனிக்குமார் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். ஆண்டுக்கு ஒரு தடவை பழனிக்குமார் ஊருக்கு வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கணவர்
 

வெளிநாட்டில் கணவர் இருக்கும் நிலையில், இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார் சித்ரவதை செய்ததோடு, அவரை அடித்துக் கொன்ற சம்பவம் மேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிக்குமாருக்கும் து.அம்பலகாரன்பட்டியை சேர்ந்த சுந்தரேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பின்னர் பழனிக்குமார் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். ஆண்டுக்கு ஒரு தடவை பழனிக்குமார் ஊருக்கு வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் பழனிக்குமார் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், சுந்தரேஸ்வரி மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சுந்தரேஸ்வரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த நிலையில், மாமியார், மாமனார் வரதட்சணை கேட்டு மகனை சித்ரவதை செய்ததாகவும், பணம் கொடுக்காததால் மகளை அடித்துக் கொன்றவிட்டதாகவும் அவரது தந்தை, கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் குறித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மேலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், “சுந்தரேஸ்வரியின் மாமனார், மாமியார் கேட்க கேட்க நாங்கள் செஞ்சிக்கிட்டுதான் இருந்தோம். கல்யாணம் முடிந்த நாளில் இருந்து எங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக்கொண்டுதான் இருந்தாங்க. நாங்களும் பொண்ணு கொடுத்துட்டோம்ன்று பொறுமையாக செஞ்சிக்கிட்டுத்தான் இருந்தோம். கடைசியில தங்க அரையாண் போடலன்னு பிள்ளையை அடிச்சேக் கொன்னுட்டாங்க.

அந்த பிள்ள காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்தியிருக்கா. யாருமே வந்து உதவி செய்யல. கையை உடச்சிட்டாங்க. பெற்றோர் வீட்டில் இருந்து வியாழக்கிழமைதான் கூட்டிட்டு போனாங்க. சனிக்கிழமை கொன்னுட்டாங்க. அடித்துக் கொன்னுப்போட்டுவிட்டு பச்சப்பிள்ளையை போட்டுட்டு ஓடிட்டாங்க. அந்த பச்சப்பிள்ள அம்மாவ பார்த்து அழுதுக்கொண்டே இருந்துச்சி. அந்த பிள்ளைய சித்ரவதை பண்ணிக் கொன்னுட்டாங்க” என்று கண்ணீர் மல்க கூறினர்.

கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மனைவியை, மாமனாரும், மாமியாரும் சேர்ந்த வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததோடு, அடித்தே கொன்ற சம்பவம் மேலூரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.