×

விளையாட போன சிறுமி போஸ்ட்மார்ட்டத்துக்கு ஏன் அனுப்பப்பட்டார் – கதற வைக்கும் காரணம் ..

உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள கோக்ராஜ் காவல் நிலையப் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது . கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பாம்புபிடிப்பவர் 15 நாட்களாக தனது குடும்பத்தினருடன் குடிசை கட்டி வசித்து வந்தார். வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் அவரது மகள் வீட்டை விட்டு வெளியே விளையாட சென்று,அதற்கு பிறகு அவர் திரும்பி வரவில்லை.அவரின் மகள்
 

உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள கோக்ராஜ் காவல் நிலையப் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது . 
கான்பூர் தேஹத் மாவட்டத்தில்  உள்ள ஒரு கிராமத்தில் ஒரு  பாம்புபிடிப்பவர் 15 நாட்களாக  தனது குடும்பத்தினருடன்   குடிசை கட்டி வசித்து வந்தார். 
வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் அவரது மகள் வீட்டை விட்டு வெளியே விளையாட  சென்று,அதற்கு பிறகு அவர் திரும்பி வரவில்லை.அவரின் மகள்  நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சிறுமியின் தந்தை  மிகவும்  தவித்தார்.

அதனால்  இரவு 10 மணியளவில், அந்த சிறுமியின்  குடும்பத்தினர் கோக்ராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.அவர்களின் தேடுதல் வேட்டையின் போது, ​​ரயில் நிலையத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் ஒரு புறா பண்ணையில் அந்த சிறுமியின்  சடலம் கண்டெடுக்கப்பட்டது.சிறுமியின் இறந்த உடலின் நிலையைப் பார்த்தபோது,பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவதாக போலீசார் கூறினர் .

போலீசார் சிறுமியின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். குழந்தையின் மாமா பாலியல் பலாத்காரம் செய்து   கொலை செய்ததாக சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார், தற்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட மாமா தலைமறைவாக உள்ளார்.