×

‘வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்…’ காதல் விவகாரத்தால் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!

இளைஞர்கள் அவர் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலானது. ஒடிசா மாநிலத்தில் ஹூட்டா மாவட்டத்திலுள்ள பங்கிடா கிராமத்தைச் சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுடன் பேச அந்த பெண் வசிக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும் கட்டியா பல்டாசிங் என்ற இரண்டு இளைஞர்கள்
 

இளைஞர்கள் அவர் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இந்த வீடியோவானது  இணையத்தில் வெளியாகி வைரலானது. 

ஒடிசா மாநிலத்தில் ஹூட்டா மாவட்டத்திலுள்ள பங்கிடா கிராமத்தைச் சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுடன் பேச அந்த பெண் வசிக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த   அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும் கட்டியா பல்டாசிங் என்ற இரண்டு இளைஞர்கள் சௌமிய ரஞ்சன் தாஸை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்தார்களே  ஒழிய  சௌமிய ரஞ்சன் தாஸை  யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
அப்போது சோர்ந்து போன  சௌமிய ரஞ்சன் தாஸ் தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தில் தவிக்க, இரண்டு இளைஞர்கள் அவர் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இந்த வீடியோவானது  இணையத்தில் வெளியாகி வைரலானது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  சௌமிய ரஞ்சன் தாஸை தாக்கிய இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.