×

வருங்கால கணவனை பேஸ்புக் காதலருடன் சேர்ந்து கொல்ல திட்டம் தீட்டிய இளம்பெண்: அதிர வைக்கும் வாக்குமூலம்!?

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து மாப்பிளையை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து மாப்பிளையை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்த கோவிந்தராஜன். இவரது மகள் ஜான்சிராணி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் இவரது தாய்மாமன் மகன் சரவணனுக்கும் திருமணம்
 

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து மாப்பிளையை கொலை செய்ய  முயற்சி செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து மாப்பிளையை கொலை செய்ய  முயற்சி செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்த கோவிந்தராஜன். இவரது  மகள் ஜான்சிராணி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் இவரது தாய்மாமன் மகன் சரவணனுக்கும் திருமணம் செய்து வைக்க கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முடிவாகி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 

இதையடுத்து ஜான்சிராணி பேஸ்புக்கில் திருச்சியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இது பெற்றோருக்குத்  தெரியவர, ‘ நீ மாமன் மகனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். 

இந்நிலையில் ஊர் திருவிழா நடந்து கொண்டிருப்பதால் சரவணனை வீட்டிற்கு அழைத்துள்ளார் ஜான்சிராணி. மகள் மனம் திருந்திவிட்டாள்  என்று பெற்றோரும் வருங்கால ,மனைவி அழைக்கிறாள் என்று சரவணனும் நம்பி சென்றுள்ளார். சரவணனுக்கு ஜூஸில்  மயக்க மருந்து கலந்து கொடுத்த ஜான்சி, அவர் ஜூஸை குடித்து முடித்ததும், ஏரி பக்கமாகச் சென்று பேசலாம் என்று அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற   சரவணன் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து அங்கு மறைந்து கொண்டிருந்த, ஜான்சியின் காதலரும், ஜான்சியும்  சேர்ந்து அங்கிருந்த பொருட்களைக் கொண்டு சரவணனைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை அங்கேயே விட்டுவிட்டு ஜான்சி வீட்டிற்கு வந்துள்ளார். ஏரிக்கரையில் சரவணன் அடிபட்டுக் கிடந்ததைக் கண்ட  அவரது உறவினர்கள் அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுயநினைவுக்கு வந்த சரவணன் நடந்தவற்றைப் போலீசில் கூற ஜான்சியின் திட்டம் அம்பலமாகியுள்ளது. இதனால் ஜான்சிராணி கைது செய்யப்பட்டார். அவரின் காதலரை  போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.