×

வயிற்றில் இருந்த குழந்தை…கையில் இருந்த குழந்தையுடன் துடிதுடித்து இறந்த கர்ப்பிணி; கலங்க வைக்கும் சோகம்!

திலகவதி என்ற மனைவியும், திருமுருகன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். திலகவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கு திலகவதி என்ற மனைவியும், திருமுருகன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். திலகவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மீன்பிடி தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி கடலுக்கு சென்றுவிட மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல இ.சி.ஆர். சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில்
 

திலகவதி என்ற மனைவியும், திருமுருகன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். திலகவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கு திலகவதி என்ற மனைவியும், திருமுருகன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். திலகவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

மீன்பிடி தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி கடலுக்கு சென்றுவிட மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல  இ.சி.ஆர். சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக திலகவதி அழைத்து சென்றார். அங்குள்ள  தடுப்புச்சுவர் வளைவு பகுதியை இருவரும் கடக்க நின்றிருந்த போது   கார் ஒன்று தாய் -மகன் இருவர் மீதும் மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த  மாமல்லபுரம் போலீஸ், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி மற்றும் மகன் இறந்த சமயத்தில் மீன்பிடிக்க சென்றிருந்த சத்தியமூர்த்திக்கு வாக்கிடாக்கி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கரைதிரும்பிய அவர், மனைவி மகன் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.