×

வயதான தாய் தந்தையை வீட்டை விட்டு துரத்திய பிள்ளைகள் : மர்மமான முறையில் இறந்து கிடந்த பரிதாபம்; பதற வைக்கும் சம்பவம்!?

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை : பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ் கொடுங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு – அலமேலு தம்பதி. இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருந்துள்ளனர். வீடு, நிலம் என வாழ்ந்து வந்த இவர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகள் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை வீட்டிலிருந்து விரட்டியுள்ளனர்.
 

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை : பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ் கொடுங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  அப்பாவு – அலமேலு தம்பதி. இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருந்துள்ளனர். வீடு, நிலம் என வாழ்ந்து வந்த இவர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகள் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை வீட்டிலிருந்து விரட்டியுள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த இவர்கள், அந்த ஊரிலிருந்த சுடுகாட்டில் தங்கியதோடு இல்லாமல், அவ்வழியே  வருபவர்களிடம் யாசகம் கேட்டு கடந்த மூன்று மாதங்களாக பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பாவு – அலமேலு தம்பதி நேற்று காலை மர்மமான முறையில் எரிந்து கிடந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து  வழக்குப்பதிவு செய்ததோடு, இது கொலையா? அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிள்ளைகளால் விரட்டப்பட்ட 95 வயதான அப்பாவு மற்றும்  90 வயதான அலமேலுவும் நிர்க்கதியாக நின்றதோடு, மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம்  பார்ப்பவர்  நெஞ்சை கலங்கச் செய்துள்ளது.