யோகா கற்க வந்த பெண்களிடம் சில்மிஷம்: பிரபல யோகா குரு அதிரடி கைது!?
பாலியல் புகாரில் இந்திய யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா: பாலியல் புகாரில் இந்திய யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிராயக் ராஜில் உள்ள அங்குள்ள அனுமன் கோயிலின் இளைய மடாதிபதி ஆனந்த் கிரி. 38 வயதான இவர் யோகா மற்றும் ஆன்மீக வகுப்புகளை இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். அந்த வகையில் யோகா மற்றும் ஆன்மீக வகுப்புக்காக ஆனந்த் கிரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அப்போது பயிற்சி பெற வந்த இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆனந்த் கிரிக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகாரில் நியூ சவுத் வேல்ஸ் நகரின் புறநகர் பகுதியான ரூட்டின் ஹில் என்னும் இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய யோகா குரு ஆனந்த் கிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 13ஆம் தேதி இந்தியா திரும்ப இருந்த நிலையில், ஆனந்த் கிரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது குருவும், பதே அனுமன் கோவிலின் மடாதிபதியுமான நரேந்திர கிரி உறுதி செய்துள்ளார் குறிப்பிடத்தக்கது.