மும்பையில் கிரிக்கெட் வீரர் படுகொலை: தோழியுடன் சென்ற போது நடந்த பயங்கரம்!?
மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் ராகேஷ் பன்வார். கிரிக்கெட் வீரான இவர் அப்பகுதியில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் கற்று கொடுத்து வருகிறார். இவர் நேற்று இரவு மும்பையின் பாண்டூப் பகுதிக்குத் தனது தோழியுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டுத் தப்பியுள்ளனர்.இதனால் படுகாயமடைந்த ராகேஷ் பன்வார் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராகேஷின் கொலை சம்பவம் குறித்துக் கூறியுள்ள அவரது நண்பர் கோவிந்த் ரத்தோர், ராகேஷுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான கான் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவேளை அதன்காரணமாக அவர் கூட இதைச் செய்திருக்க வாய்ப்புள்ளது’ என்றார்.
தோழியுடன் சென்ற கிரிக்கெட் வீரர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.