×

மாட்டுக்கறி சூப் சாப்பிட இளைஞருக்கு அடி, உதை: நாகையில் பரபரப்பு!

மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை: மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாட்டுக்கறி விற்பனை செய்பவர்கள், அதைச் சாப்பிடுபவர்களைத் தாக்கும் சம்பவம் சில காலமாகத் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர் தான் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் வசித்த பகுதியைச் சேர்ந்த
 

மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை: மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாட்டுக்கறி விற்பனை செய்பவர்கள், அதைச் சாப்பிடுபவர்களைத்  தாக்கும் சம்பவம் சில காலமாகத் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர் தான் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் அவர் வசித்த பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முகம்மது பைசான் இதுகுறித்து  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

முகம்மது பைசான்  அளித்த புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய தினேஷ் குமார், கணேஷ் குமார், மோகன் குமார் , அகஸ்தியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 5 பிரிவுகளில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.